என்னை பற்றி

November 9, 2009 at 10:44 am (Uncategorized)

:)
Since you said
We can be together
I tried to search
A guy like you
I thought I found U
But just when I heard
That my heart doesn’t accept
Any newcomers…
I realized how much I love you….
No words to express……… ever….

Cheer’s

Permalink Leave a Comment

இதம் புரியும்

May 16, 2010 at 5:50 am (Uncategorized)

பூவின் மொழி… நிறமா… மணமா…? ஊட்டிக்கு வந்தால் ‘இதம்’ புரியும்
கோடை சீசன்… ஊட்டியின் சுற்றுலா மையங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ‘கால் வைக்க’ முடியாத அளவுக்கு கூட்டம். சமவெளியில் ‘சுடும் வெயிலால்’ உண்டான உஷ்ணத்தை தணிக்க எண்ணும் மக்கள், இதமான குளிர் காற்றை தேடி அடைக்கலமாக வரும் ஊட்டியில்,பசுமை கொஞ்சும் இயற்கை அழகும், வண்ண மலர்களோடு ‘ரீங்காரம்’ பாடும் வண்டுகளும் அவர்களை வரவேற்க காத்து கிடக்கின்றன.
இந்த பூக்களை சுமந்த மலையரசியின் மகுடத்திலா சில மாதங்களுக்கு முன் ‘உடைசல்’ ஏற்பட்டது;வியப்பூட்டும் ‘பட்டு போர்வையின்’ பசுமைக்குள்ளா நிலம் சரிந்த பெரும் சோகங்கள் நிகழ்தன; இதமான தென்றல் தவழும் ‘அமைதி’ பள்ளதாக்கிலா 51 உயிர்கள் மூச்சு முட்டி ஜீவ சமாதியாகின என்ற கேள்விகள் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் மனதிலும் எழும் அளவுக்கு, ‘ஏழைகளின் சுவிட்சர்லாந்து’ என்றழைக்கப்படும் ‘ஊட்டி’ தனது அழகை மெருகூட்டியுள்ளது. கடந்த நவம்பர் மாத பாதிப்புகளின் சுவடே தெரியாத அளவுக்கு பொலிவாக்கப்பட்டுள்ள இந்த ‘சொர்க்கபூமிக்கு’ நீங்கள் வருவதற்கு முன், உங்களை வழிநடத்தி செல்லும் சில முக்கிய தகவல்கள் இதோ…!
ஊட்டி தாவரவியல் பூங்கா: ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட காய்கறி தோட்டம் பராமரிக்காமல் விடப்பட்டதால், அப்பகுதியில் ஒரு பூங்காவை துவக்க, ஊட்டியில் வசித்து வந்த ஆங்கிலேயர்கள் நன்கொடை மற்றும் சந்தா வசூலித்தனர். இதில், 1847ம் ஆண்டில் மெட்ராஸ் கவர்னராக இருந்த டூவிடேல் என்பவர், பூங்கா மேம்பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார். இதனை தொடர்ந்து,பூங்காவை பொலிவாக்கும் வகையில், லண்டனில் உள்ள ‘க்யூ’ பூங்காவில் பணிபுரிந்த அனுபவத்தை பெற்றிருந்த தோட்டக்கலை நிபுணர் ஐவர் என்பவர் பூங்கா கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பூங்காவின் சிறிய பகுதி காய்கறி தோட்டமாகவும், பெரும்பாலான பகுதி சோலையாகவும், முட்புதர் சூழ்ந்தும் இருந்ததை மாற்றி,10 ஆண்டுகள் போராடி லண்டன் ‘க்யூ’ பூங்காவை போல அழகிய புல்தரைகள் மற்றும் பூந்தோட்டமாக, ஊட்டி தாவரவியல் பூங்காவை மாற்றினார்.
மான் பூங்கா: ஊட்டி ஏரியின் மறு கரையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மான் பூங்கா 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 22 கடமான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிய படகு இல்ல சாலை வழியாக இங்கு செல்லலாம். புதிய வரவாக இரண்டு மான் குட்டிகள் ‘துள்ளி திரிந்து’ வருகின்றன.
தொட்டபெட்டா சிகரம்: தென்னிந்தியாவின் உயரமான சிகரமாக கருதப்படும் தொட்டபெட்டா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2,623 மீ., உயரத்தில் உள்ளது. நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினர் மொழியில், தொட்டபெட்டா என்றால் ‘உயரமான மலை’ என்று பொருள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினரால் காட்சிமுனை அமைக்கப்பட்டு, ‘டெலஸ்கோப்’பில் இருந்து ஊட்டி நகரம், குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை ரசிக்கலாம். ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது.
குன்னூர் சிம்ஸ்பூங்கா: ஜே.டி.சிம் என்ற ஆங்கிலேயரால், 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ் பூங்காவில், 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. 27 வகையான கற்பூர மரங்கள், 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை, யுஜிநாய்டஸ் உட்பட பல வகையான பழமை வாய்ந்த மரங்கள் அலங்கரிக்கின்றன. படகு இல்லம், சிறுவர் பூங்காவின் இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பு, 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலர் செடிகள் பூத்து குலுங்குவது கண்கொள்ளா காட்சியாகும். குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவில் சிம்ஸ்பூங்கா உள்ளது.
கோத்தகிரி நேரு பூங்கா: கோத்தகிரியின் மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் உள்ள நேரு பூங்காவில் பல அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் ஆகியவையும் இங்கு உள்ளன. கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் ஆகிய பகுதிகளில் இருந்து பூங்காவிற்கு நடந்தே செல்லலாம்.
கல்லட்டி நீர்வீழ்ச்சி: ஊட்டி-முதுமலை சாலையில் 13 கி.மீ., தொலைவில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டிய காலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனங்களில் காணப்படும் அரிய வகை பூக்களும் பூத்திருப்பதை பார்க்க கிடைப்பது பயணிகளுக்கு வரப்பிரசாதம்தான்.
லேம்ஸ்ராக்: சிம்ஸ் பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளது. காட்சி முனையில் இருந்து பல ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளதாக்கு காட்சிகளை காண்பதும்; பள்ளதாக்கில் கொட்டி கிடக்கும் இயற்கை காட்சிகள் மனதுக்கு இதம் தரும்.
டால்பின்ஸ் நோஸ்: லேம்ஸ்ராக்கில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள டால்பின்ஸ் நோஸ் காட்சி முனையில் டெலஸ்கோப் உள்ளது. பள்ளத்தாக்கு காட்சி முனையில் இருந்து 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகள், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி, மேட்டுப்பாளையம் பகுதி ஆகியவற்றை இங்கிருந்து ரசிக்கலாம். மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்காட்சி முனைக்கு செல்லும் போதே அதன் குளிர்ச்சியின் குதூகலம் பயணிகளை வரவேற்கும்.
கேத்ரீன் நீர்வீழ்ச்சி: பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகள், பாறைகள் வழியாக வரும் கேத்ரீன் நீர்வீழ்ச்சி, காட்சி கோபுரம் கோத்தகிரி அரவேணு பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. பாசி படிந்த பாறைகள், அழகான நீர்வீழ்ச்சி ‘போட்டோ’ எடுக்க சிறந்த இடம்.
கோடநாடு காட்சிமுனை: கோடநாடு காட்சிமுனையில் இருந்து பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வனங்கள் மட்டுமே காட்சி கோபுரத்தில் உள்ள ‘பைனாகுலர்’ மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜ்ஜல் கோட்டை, அல்லிராணி கோட்டையை காண்பது இதன் சிறப்பம்சம். தெங்குமரஹாடா கிராமத்தின் அழகையும் இங்கிருந்தே ரசிக்கலாம். நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும் ‘மாயாறு’ ஆறு வரையுள்ள அழகிய வயல்வெளிகள், அடர்ந்த வனங்கள், யானைகளின் வழித்தடங்கள், ரங்கசாமி கோவில் மலை உட்பட மலை முகடுகள் அனைத்தையும் இங்கிருந்தே பார்க்கலாம்.
பைக்காரா படகு இல்லம்: பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது இங்குள்ள அருவி ரம்மியத்தை ஏற்படுத்தும். நீர்வீழ்ச்சியை அடுத்து ஒரு கி.மீ., தொலைவில் பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்ட படகு இல்லம் கண்கொள்ளா காட்சியாகவும், சவாரி செய்யவும் விரும்புகின்றனர். இங்கு புதிதாக விடப்பட்டுள்ள ‘அட்வென்சர்’ படகு இளைய பட்டாளங்களின் வேகத்துக்கு சவால் விடும். பைக்காரா செல்லும் வழியில் பைன் பாரஸ்ட், ஸ்கூல் மந்து, ஷூட்டிங் பாய்ன்ட் சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்தபகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், குப்பை கொட்டினாலோ, இயற்கையை சேதப்படுத்தினாலோ அபராதம் தான். ஊட்டியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம்: கூடலூர் ஒட்டி அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், மான், யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உட்பட விலங்கினங்கள், மயில் உட்பட பறவையினங்கள் வசிக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர், ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இவர்கள், வனத்துறை வாகனங்கள் மூலமும், யானைகள் மூலமும் சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தற்போது கோடையில் வனத்தீ ஏற்பட்டு வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. வனத்துறையினர் தேதி அறிவிக்கும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து 17 கி.மீ., தூரத்தில் உள்ளது.
ஊசிமலை: ஊட்டி – கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில் உள்ளது ஊசிமலை காட்சி கோபுரம். இங்கிருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம் மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.
ரோஜா மலரே ராஜகுமாரி…: ஊட்டி தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டை கொண்டாடும் வகையில், 1996ம் ஆண்டில் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஊட்டி விஜயநகரப் பகுதி ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டு, ‘நூற்றாண்டு ரோஜா பூங்கா’ உருவாக்கப்பட்டது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் 5 எக்டேர் பரப்பில் 6 தளங்களில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 ரக ரோஜாக்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில் ரோஜாக்கள் மலர்ந்து வருகின்றன. 2006ம் ஆண்டு ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில் ‘கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்’ விருது சர்வதேச ரோஜா சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது நீலகிரிக்கே பெருமையை சேர்த்துள்ளது. ஆசியாவில் அதிகபட்ச ரோஜா ரகங்களை கொண்ட பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு.
‘இலவசமா’ ஒரு பூங்கா…! மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊட்டி – பர்ன்ஹில் சாலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தோட்டக்கலை துறையால் மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., தூரம் உள்ள இப்பூங்காவில், அல்னஸ் நெப்லென்சிஸ், கேலிஸ்டோமன், கூப்ரசுஸ், மேக்ரோகார்பா உட்பட 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இதில், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘கிரிக்கெட்’ பேட் தயாரிக்க பயன்படும் ‘வில்லோ’ மரமும் இங்குண்டு. பூங்காவை ஒட்டி சதுப்பு நிலம் உள்ளதால், மாலை நேரங்களில் 30க்கும் மேற்பட்ட நீலகிரி வாழ் பறவை இனங்களின் ‘இலவச இசை’ அனைவரின் மனதுக்கும் இதமளிக்கும். அமைதியான சூழலில் ‘புத்தகம்’ படிக்க விரும்புபவர்கள் இங்கு வரலாம்.
சவாரிக்கு புதிய படகு இல்லம்…: ஊட்டி நகரின் மத்திய பகுதியில் தற்போதைய ரேஸ்கோர்ஸ் முதல் காந்தல் வரையுள்ள பகுதி முழுவதும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நீர்தேக்கமாக இருந்தது. 1823ம் ஆண்டு அப்போதைய கோவை கலெக்டர் ஜான் சலீவனால், படகு சவாரிக்கும், மீன் பிடிக்கவும் ஏரி உருவாக்கப்பட்டது. 2.75 கி.மீ., நீளமும், 100 முதல் 140 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. 1877ம் ஆண்டு வரை இந்த ஏரி நீர் குடிநீராக பயன்பட்டு வந்த நிலையில், ஊட்டி நகரிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியில் கலந்ததால் குடிநீருக்கு பயனற்று போனது. தற்போது தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பராமரிப்பில், 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 100க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏரியின் மறு கரையில் உருவாக்கப்பட்ட புதிய படகு இல்லம் தற்போது புதிய பொலிவை பெற்றுள்ளது.
‘தைய்ய, தைய்யா…’ பயணத்தில் குஷி: பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப் பட்ட ஊட்டி மலை ரயில் குழந் தைகளின் மொழியில் டாய் டிரெயின் என அன்புடன் அழைக்கப்படுகிறது. ஊட்டியில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைரயில் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குன்னூர் – ஊட்டி இடையே மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம். தற்போது, இதற்கான பயண சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால், பயணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் சற்று முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்து விட்டால், ஏமாற்றம் இருக்காது. ஊட்டி முதல் குன்னூர் வரை மட்டுமே பயணம் இருந்தாலும் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடலாம்.

Permalink Comments Off

ஜிஎஸ்எல்வி

May 16, 2010 at 5:32 am (அறிவியல்)

ஜி.எஸ்.எல்.வி., பயணம் தோல்வி: செயற்கைக்கோளை செலுத்த முடியவில்லை
ஸ்ரீஹரிகோட்டா : இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவான, கிரையோஜெனிக் இன்ஜினில் ஏற்பட்ட சிறிய கோளாறினால் ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டரை நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது. குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்லாமல் பாதை மாறிய ராக்கெட், பின்னர் கடலில் விழுந்தது. ‘அடுத்த ஆண்டு சரியாக இதே நாளில் திட்டமிட்டபடி ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவ முடியும்’ என, ‘இஸ்ரோ’ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கனவு திட்டமான ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட், கடந்த 7ம் தேதி சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன் டவுண், நேற்று முன்தினம் காலை 11.27க்கு துவங்கியது. தொடர்ந்து 29 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு, நேற்று மாலை சரியாக 4.27 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சரியான அளவில் பயணத்தை துவக்கிய இந்த ராக்கெட், அடுத்த இரண்டரை நிமிடத்தில் அதன் பாதையில் இருந்து விலகி மாயமானது. இதனால், ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் தோல்வியில் முடிந்தது.

இது குறித்து, ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன், விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது: ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட், திட, திரவ, அதிக குளிர்தன்மையுள்ள கிரையோஜெனிக் என மூன்று பாகங்களை உடையது. ராக்கெட் செலுத்தப்பட்ட போது மூன்று நிலைகளுமே சிறப்பாக செயல்பட துவங்கியது. அடுத்த இரண்டரை நிமிடத்தில் மூன்றாவது நிலையில் இருக்கும் கிரையோ ஜெனிக் பகுதியில் உள்ள இரண்டு சிறிய ரக இன்ஜினில் ஏற்பட்ட கோளாறே ராக்கெட் தோல்விக்கு காரணமாக இருக்கும் என சந்தேகம் உள்ளது. இது குறித்த உறுதியான முடிவை விஞ்ஞானிகளின் விரிவான ஆய்வுக்கு பின்னரே அறிவிக்க முடியும். ராக்கெட் தோல்வியடையத் துவங்கிய அடுத்த வினாடியில் இருந்தே இதற்கான பணியினை துவக்கி விட்டோம். ராக்கெட் தோல்வியால் விஞ்ஞானிகளின் 18 ஆண்டு கால முயற்சி தோல்வியடைந்து விட்டதாக கருதத் தேவையில்லை. தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து, அதை சரிசெய்து அடுத்தாண்டு உறுதியாக இதே நாளில் ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும். இவ்வாறு, ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏற்கனவே இரு முறை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போது அந்த ராக்கெட்டில் ரஷ்ய தயாரிப்பான கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் மூலம் உருவாக்கப்பட்ட மூன்றாவது ராக்கெட் நேற்று தோல்வியில் முடிந்தது.
குவிந்தனர் விஞ்ஞானிகள்: ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் செலுத்தப் பட்டதை உலகமே உற்று நோக்கியதால் விஞ்ஞானிகள் ஆரம்பம் முதலே பதட்டமாக காணப்பட்டனர். முதல்நிலையை ராக்கெட் வெற்றிகரமாக கடந்ததால் விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், ராக்கெட் தோல்வி என தெரிந்ததும், விஞ்ஞானிகள் மத்தியில் அமைதி நிலவியது. ‘இஸ்ரோ’வின் அழைப்பின் பேரில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் ‘இஸ்ரோ’வின் முன்னாள் தலைவர்கள் கஸ்தூரிரங்கன், மாதவன் நாயர் உள்ளிட்ட ஏராளமான இந்திய விஞ்ஞானிகளும் ராக்கெட் செலுத்தப்படுவதை கண்காணித்தனர். ராக்கெட் ஏவப்படுவதை அறிந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ராக்கெட் ஏவுதளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்திருந்தனர். ராக்கெட் தோல்வியடைந்தது குறித்து ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணனும், திட்ட இயக்குனர் முஸ்லிமும் ஆலோசனை நடத்தினர்.
ராக்கெட்டில் இருந்தவை! இதற்கு முன்பு அனுப்பப்பட்ட ஐந்து ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்களிலிருந்து, தற்போது அனுப்பப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் முற்றிலும் மாறுபட்டது. காரணம், முன்பு அனுப்பப்பட்டவை எல்லாம் ரஷ்ய தொழில்நுட்பத்தைச் சேர்ந்தவை. இது, முற்றிலும் உள்நாட்டுச் சரக்கு. அது மட்டுமல்லாமல், முதல் முறையாக ராக்கெட்டில், அதிநவீன மிஷன் கம்ப்யூட்டர்களும், தட்பவெப்பத்தைக் கணித்து, கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பும் அதிநவீன இயந்திரமும் மாற்றப்பட்டு உள்ளன. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள, ‘ஜி-சாட் 4′ செயற்கைக்கோள், 1,022வது வினாடியில், நீள்வட்டச் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து, 720 வினாடிகள் கிரையோஜெனிக் இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோளின் நீள்வட்டச் சுற்றுப்பாதை, பூமியிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 170 கிலோ மீட்டரும், அதிகபட்சம் 36 ஆயிரம் கிலோ மீட்டரும் கொண்டதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதில், இரண்டு அம்சங்கள் இருந்தன. ஒன்று, ‘கா’ பேண்ட்; மற்றொன்று, ‘ககன்’ பேண்ட்.
‘கா’ பேண்ட் தகவல் தொழில்நுட்பத்துக்கானது. டி.டி.எச்., – ஏ.டி.எம்., போன்ற சேவைகளை மிகத் துல்லியமாகவும், விரைவாகவும் பெற்றிருக்க முடியும். ‘ககன்’ பேண்ட், தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்தை நெறிமுறைப்படுத்துவதற்கானது. இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து, இந்தச் செயற்கைக்கோள், படங்களையும், தகவல்களையும் அனுப்பும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 8.657 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் விட்டமும் கொண்ட உலோகத்தின் மூலம், செயற்கைக்கோளும், ராக்கெட்டிலுள்ள எலக்ட்ரானிக் உபகரணங்களும் பாதுகாக்கப்பட்டிருந்தன. ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருந்தால், அச்சாதனையின் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் எதுவும் சாத்தியம் என்ற நிலையை எட்டிய, ஆறாவது நாடாக இந்தியா உயர்ந்திருக்கும்

‘துவண்டுவிட மாட்டோம்; வெற்றி பெறுவோம்’: ”ஜி.எஸ்.எல்.வி., தோல்வியில் நிச்சயமாக எந்த சதிதிட்டமும் இல்லை; தவறுகளை ஒரே ஆண்டில் சரிசெய்து முற்றிலும் இந்திய தயாரிப்பில் உருவாகும் ஜி.எஸ்.எல்.வி., கிரையோஜெனிக் ராக்கெட்டை விண்ணில் ஏவுவோம்,” என ‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜி.எஸ்.எல்.வி., திட்டம் வெற்றியடையவில்லை என, அறிவிப்பதில் வருத்தப்படுகிறேன். திட்டமிட்டபடி நேற்று மாலை 4.27 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அதற்கு முன், 29 மணி நேர கவுன் டவுணும் எந்த சிக்கலும் இன்றி சரியானபடியே நடந்தது. ராக்கெட் ஏவப்படும்போது ஜி.எஸ்-2 என்ற இறுதிக் கட்டத்தை 293வது வினாடியில் அடைந்தபோது, ராக்கெட் தள்ளாடுவதை உணர்ந் தோம். என்ன காரணம் என, கண்டறியும் முன் ராக்கெட் திசைமாறி கடலில் விழுந்தது. முதலில் கிடைத்த தகவலின்படி, சிறிய ரக கிரையோஜெனிக் இயந்திரம்தான் இயங்கவில்லை என யூகித்தோம். தற்போது கிடைத்த தகவலின் படி, பிரதான கிரையோஜெனிக் இயந்திரமே இயங்கவில்லை என, தெரியவந்துள்ளது. இருந்தாலும் எதையும் உறுதியாக சொல்ல முடியாத நிலையே நிலவுகிறது. விரிவான ஆய்வுக்கு பிறகே உறுதியான முடிவை எடுக்க முடியும். இரண்டு, மூன்று நாட்களில் ஆழமான ஆய்வு மேற் கொண்ட பின் ஏன் நடந்தது, எப்படி நடந்தது, அதை எப்படி சரிசெய்வது என்பது பற்றி திறமையான எங்கள் குழு கண்டறியும். பழைய தவறுகளை ஒரே ஆண்டில் சரிசெய்து, முற்றிலும் இந்திய தயாரிப்பில் உருவாகும் ஜி.எஸ்.எல்.வி., கிரையோஜெனிக் இயந்திர ராக்கெட்டை விண்ணில் ஏவுவோம். கிரையோஜெனிக் இயந்திரத்தை தரையில் வைத்து முழுமையான சோதனை மேற்கொண்டோம். அவற்றில் வெற்றியே கிடைத்தது. சில சோதனைகளை விண்ணில் ஏவும்போதுதான் மேற்கொள்ள முடியும். அதனால் தான் இந்த சிக்கல் எழுந்தது.

கிரையோஜெனிக் தொழில் நுட்பம் மிகவும் சிக்கலான ஒன்று. இதை அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட எங்கள் விஞ்ஞானிகள் அல்லும், பகலும் அயராது பாடுபட்டு மீண்டும் வெற்றிகரமாக கொண்டு வருவோம். முதலில் ஏவப் பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்கூட தோல்விதான் அடைந்தது. ஆனால், அதன் பிறகு தொடர்ந்து 15 வெற்றிகளைப் பெற்றது. அதுபோல், இப்போது இந்திய தொழில் நுட்பத்தில் தயாரான ஜி.எஸ்.எல்.வி., டி3 தோல்வியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் வெற்றியைத்தான் பெறுவோம். முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் தயாராகும் அடுத்த ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை ஏவுவதற்கு முன், ரஷ்யா நமக்கு இன்னும் தர வேண்டிய கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் அடுத்தடுத்த செயற்கைக்கோள் களை அனுப்புவோம். வரும் செப்டம்பர் மாதம் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்திற்கு உதவக்கூடிய ‘ஜி-சாட் 5பி’ விண்ணில் ஏவப்படும். அதன்பிறகு ‘ஜி-சாட் 6′ ஏவப்படும். என்னதான் நமக்கு ரஷ்ய தொழில்நுட்பம் கிடைத்தாலும், நாம் நம் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம். இரண்டாது ரஷ்ய ராக்கெட்டை வாங்குவதை விட நாம் சொந்தமாக ராக்கெட் தயாரித்தால் பாதியளவே செலவாகும். இந்த தோல்வியால் நாங்கள் துவண்டு விடவில்லை. கடமையைச் செய், பலனை எதிர்பார்க் காதே என்பதைப் போல தொடர்ந்து எங்கள் கடமையை வெற்றிகரமாக செய்வோம். ஜி.எஸ்.எல்.வி., டி3 ராக்கெட் தோல்வியில் நிச்சயமாக எந்த சதியும் இல்லை. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
வழக்கமாக ராக்கெட் ஏவியவுடன் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்திக்கும்போது, ஒட்டுமொத்த குழுவினரையும் மேடையில் அமர வைத்து சந்திப்பது வழக்கம். ஜி.எஸ்.எல்.வி., திட்டம் தோல்வியடைந்ததால், நிருபர்களின் கேள்விக் கணைகளால் விஞ்ஞானிகள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, இஸ்ரோ தலைவர் தனியாகவே நிருபர்களை சந்தித்தார்.

Permalink Leave a Comment

படித்ததில்,பிடித்தது

March 2, 2010 at 5:38 am (எனக்கு பிடித்தவை :))

உதடுகளில்
குவிகிற
சுழிகிற
நெளிகிற
திறக்கிற
மூடுகிற
சிரிக்கிறதென
எத்தனை செய்கிறாய் பேசத்தான்
மாட்டேன் என்கிறாய்!


உள்ளுக்குள் அழுகிறேன்
உன் காதல் தந்த வேதனையால்
வெளியில் சிரிக்கிறேன்
என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக..
உன்னுடன் சில காலம்..
உன் நினைவுகளுடன் சில நாள் ..
இவை அனைத்தையும் மறக்க
நினைக்கிறேன் ஒரு கானம்
மறு கானம் வேண்டாம் என்கிறது
என் மனம்..


இன்றுடோடு என் வாழ்க்கை பயணம்
முடிகிறது ..
காதல் என்னும் தொடர் கதைக்கு
முற்று புள்ளி வைக்கிறேன்..
என் காதலுக்கு மட்டும் தான்
உனக்கு இல்லை..
உன்னை விட்டு பிரிகிறேன் நிரதரமாக..
ஏன் என்றால் நீ இன்றி என் வாழ்க்கை
வெள்ளை காகிதம்..
உன்னால் எழுதிய கதை..
இன்று உன்னால் தான் அது
இன்று மிண்டும் ஒரு வெள்ளை
காகிதம் ஆகிறது..
ஆனால்
இறந்த காலம் மிண்டும் வந்தால்
பிரிந்த உன்னை மிட்டு கொள்வேன்..
இது நிச்ச்யம்

எத்தனையோ உறவுகளை
கண்டேன்..
உன்னை போல் எந்த உறவும்
என்னை நேசித்ததில்லை..
சில உறவுகளின் பிரிவுக்கு
நான் வருந்தியதில்லை..

ஆனால்,
உன் பிரிவு என்னை
விழவைத்தது.
உன்னை அதிகம் நேசித்தால்
அதை விட இரு மடங்கு
உன்னை வெறுக்கிறேன்..

கண்ணிருடன் வாழும்
காலம் இன்று
இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு
வாழ்வதினால் அன்பே


வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..

என் உணர்வுகளை புரிந்தவர்கள்
உலகில் இல்லை.
ஒவ்வொரு எதிர்பார்புகளும்
ஏமாற்றத்தில் தான்
முடிகிறது..?கனவுகள்
நிஜமாகவும் இல்லை..

காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை ?


உன் கை பிடித்து
உன் பாதம் தொடர ஆசை
நீ எனக்கு முன்னாலும்
என் பெயருக்கு முன்னாலும்
வருவாயா….?

Frwd msg :)

Permalink Leave a Comment

why women cry

December 21, 2009 at 7:14 am (பொண்ணுங்கள் மட்டும்)

A little boy asked his mother, “Why are you crying?” “Because I’m a woman,” she told him.

“I don’t understand,” he said.
His Mom
just hugged him and said,
“And you never will.”

Later the little boy asked his father, “Why does mother seem to
cry for no reason?”

“All women cry for no reason,”
was all his dad
could say.

The little boy grew up and became a man, still wondering why women cry.

Finally he puts in a call to God. When God got on the phone, he asked, “God, why do women cry so easily?”

God said,
“When I made the woman
she had to be special.

I made her shoulders strong enough to carry the weight of the world,

yet gentle enough to give comfort.

I gave her an inner strength to endure childbirth and the rejection that many times comes from her children
.

I gave her a hardness that allows her to keep going when everyone else gives up, and take care of her family through sickness and fatigue
without complaining.

I gave her the sensitivity to love her children under any and all circumstances, even when her
child has hurt her very badly.

I gave her strength to carry her husband through his faults and fashioned her from his rib to
protect his heart.

I gave her wisdom to know that a good husband never hurts his wife, but sometimes tests her strengths and her resolve to stand beside
him unfalteringly.

And finally, I gave her a tear to shed. This is hers exclusively to use whenever it is needed.”

“You see my son,” said God,
“the beauty of a woman is not
in the clothes she wears, the figure that she carries, or the
way she combs her hair.

The beauty of a woman must be seen in her eyes, because that is the doorway to her heart – the place where love resides.”

Permalink Comments Off

காகிதத்தில் மலர்ந்த திருக்குறள்

December 18, 2009 at 8:07 am (Uncategorized)

காரைக்குடி : காரைக்குடி ஓவிய ஆசிரியர் பார்த்திபன், திருக்குறள் காகிதப்பூ மலையை வடிவமைத்து உள்ளார். இவர் ஓவியத்தில் புதுமை படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். இதனால் ஓவியத்தில் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த 2003 ல் “சரித்திரம் அன்று முதல் இன்று வரை’ என்ற வரலாற்று ஓவிய புத்தகம் உருவாக்கினார். 2007ல் ஸ்டாம்ப் அளவு பேப்பரில் (2.9 செ.மீ., நீளம், 3.9 செ.மீ., அகலம்) வானவில், கரும்பலகை என்ற சிறிய ஓவிய புத்தகம் தயாரித்தார். கடந்த ஆண்டு விரல் நுனி அளவில் “சின்ன உலகம்’ (1.செ.மீ., நீளம், 0.5 செ.மீ., அகலம்) என்ற புத்தகத்தை வடிவமைத்தார். இதில் 181 நாடுகளை பற்றிய குறிப்பு, மக்கள் தொகை, நில பரப்பு, ஆட்சிமுறை, மொழி என பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
காகிதப்பூ: தற்போது 1,330 திருக்குறளையும் எழுதி, காகிதப்பூ மாலையாக தொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “”படிக்கும் போதே கின்னஸ் சாதனைக்காக முயற்சித்து வருகிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று திருக்குறள் மாலையை இயேசுவிற்கு அணிவித்து மகிழ்வேன். இம்மாலை தயாரிக்க மூன்று மாதம் ஆனது,” என்றார்.

http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=122

Permalink Leave a Comment

பெண்கள்

December 8, 2009 at 8:21 am (பொண்ணுங்கள் மட்டும்)

Permalink Leave a Comment

நட்சத்திரம்

December 2, 2009 at 4:47 am (அறிவியல்)

வெடித்து சிதறும் நிலையில் ராட்சத நட்சத்திரம்

அண்டவெளியில், இதுவரை மனித ஆய்வுக்கு புலப்படாத எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பல, சூரியனைக் காட்டிலும் பல நூறு மடங்கு பெரியவை. எரிந்து கொண்டிருக்கும் இந்த நட்சத்திரங்களில் இருந்து ஏராளமான வெப்பம், ஒளி, சக்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக உள்ள இந்த நட்சத்திரங்கள், ஒரு கட்டத்தில் தங்கள் சக்தியை இழந்து, வெடித்துச் சிதறுகின்றன.

இதுபோன்ற, இறக்கும் நிலையில் உள்ள நட்சத்திரம் ஒன்று, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில், “ஹெர்செல்ஸ்’ என்ற விண்வெளி தொலைநோக்கி ஒன்றை, லண்டனில் உள்ள ராயல் விண்வெளி ஆய்வுமையம் விண்ணில் செலுத்தியது.அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் குறித்து, நிறமாலை ஆய்வுக் கருவி (ஸ்பெக்ட்ரோஸ்கோபிக்) உதவியுடன், இந்த விண்வெளி தொலைநோக்கி ஆய்வு செய்தது. அதில், இறக்கும் நிலையில் உள்ள நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்’ என்ற பெயர் கொண்ட அந்த நட்சத்திரம் வித்தியாசமானதாகவும், சூரியனை விட 30 முதல் 40 மடங்கு பெரியதாகவும் உள்ளது. பூமியில் இருந்து, நான்கு ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த நட்சத்திரம் எரிந்து கொண்டிருக்கிறது.”வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்’ நட்சத்திரத்தில் இருந்து அணுக்களும், மூலக்கூறுகளும் சுழற்றி, வெளியே வீசி எறியப்படுவது தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரம், இயல்பு அளவை விட அதிகமாக ஒளி வீசும் “சூப்பர்நோவா’ நிலையை அடைந்துள்ளது.

எனவே, எந்த நேரத்திலும் அந்த நட்சத்திரம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர கூட்டத்தில், கடந்த 200 ஆண்டுகளாக”வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்’ நட்சத்திரம் உள்ளதை, விண்வெளி ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இறக்கும் நிலையில் உள்ள இந்த நட்சத்திரம், தற்போது உட்கருவில் உள்ள எரிபொருளை மிக வேகமாக எரித்து வருகிறது. இதனால் இது சிவப்பு நிறத்தில் மிகப் பெரிய ஒரு ராட்சஷன் போல் காணப்படுகிறது.”ஹெர்செல்ஸ்’ தொலைநோக்கியில் நிறமாலை கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள “பேக்ஸ் அண்டு ஸ்பியர்’ என்ற கருவி உதவியுடன் ஆய்வு செய்ததில் “வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்’ நட்சத்திரத்தைச் சுற்றி கடல் அலை போல் மேகக்கூட்டம் திரண்டு காணப்படுகிறது.

மேலும், நட்சத்திரத்தின் வெடிப்பில் இருந்து வெளிப்படும் ஒளியின் அலை நீளத்தை நிறமாலை கருவி கொண்டு, இறந்து வரும் நட்சத்திரத்தில் ஒளி தோன்றுவதற்கான ரசாயனம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. “வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்’ நட்சத்திரத்திற்கு அருகில் ஏராளமான கார்பன் மோனாக்சைடு மற்றும் நீர் உள்ளது.இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேட் கிரிப்பின், பால்வெளி மண்டலம் சுருள் வடிவில் காணப்படுவதற்கான கொள்கைகள் குறித்து பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”இங்குள்ள கார்பன்மோனாக்சைடு வாயு அடுக்குகளின் வெப்பநிலையுடன், வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்’ நட்சத்திரத்திற்கு அருகில் உள்ள கார்பன் மோனாக்சைடு வாயு அடுக்குகளின் வெப்பநிலை, அடர்த்தி, இங்கிருந்து உள்ள தொலைவு உள்ளிட்டவைகள் ஒப்பிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்விலிருந்து, அங்குள்ள வாயு அடுக்குகளில் நீர் அதிகமாக இருக்கிறது. இது, அங்குள்ள வாயுக்களில் இயற்பியல் மற்றும் ரசாயன மாற்றங்கள் அதிகளவில் நடந்து வருவதை காட்டுகிறது.மேலும், மேகம் போன்று காணப்படும் வாயு மற்றும் தூசிக் கூட்டத்தின் ஒரு முனையில் தான், இந்த வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்’ நட்சத்திரம் அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது’ என்றார்.வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்’ நட்சத்திரம் அதன் எடையை இழந்து வருவதுடன் அதன் மேல் பகுதி விரிவடைந்து வருகிறது. இதனால் இந்த நட்சத்திரம் இறக்கும் நிலையில் உள்ளது என்பது, இந்த ஆய்வு மூலம் தெரிய வருகிறது.பிரம்மாண்ட நட்சத்திரம் வெடித்துச் சிதறுவதால், விண்வெளியில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, இதுபோன்று ஏராளமான நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. அதுபோன்ற நேரங்களில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இப்போதும் இருக்காது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5811

Permalink Leave a Comment

குத்திக் காட்டியது – என் தமிழ்

November 12, 2009 at 11:56 am (எனக்கு பிடித்தவை :))

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
‘Sorry ‘ தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை – தூக்கத்திலும் சொல்வேன்
‘Thanks ‘ ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் – இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
‘Happy Birthday da’ என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
‘Good Morning Uncle’ என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
‘Hai’ என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் – காலை
குத்தியது முள் …
‘அம்மா’ என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை – என்னை
குத்திக் காட்டியது – என் தமிழ்

Permalink Leave a Comment

கவிதை

October 26, 2009 at 10:31 am (எனக்கு பிடித்தவை :))

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி
அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

நேற்று விளையாட்டாய் உன் கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items’ ல் யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும், உம்மாக்களும் என்னுள் ஏற்படுத்திய வலியை உன்னால் உணரக்கூடுமா?

என் குரல் சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்…
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும் எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல முடிகிறதா?

என் முன்னாலே நீ உன் புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில் நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.

எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான் சொந்தம் என்று…
மூளைக்கு புரியும் இந்த உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய உன் நினைவுகள் அனைத்தும் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே இருக்கும் என சத்தியமாய் நினைக்கவில்லை…

என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.

மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்…

அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.

தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில் நீரைப்போல்…

உன் மனதின் கொடூரத்தை தாங்க இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக் கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய் இருக்கவில்லை.

என் காதல் நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ வைத்துவிட்டு, நீ குளிர்காய்கிறாய்.

யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க தயாராய் உன் இதழ்கள், ஊமையாகிப் போனது என் தேசம்.

என் SMS சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்..
இப்போது உன் Outbox’ ல் கூட என் SMS இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?

நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும் சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என் மனம்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாய் என்று..
“மனம் மரணமடைந்தது” என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன் அன்று..

வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும் நீ எனக்கு கொடுத்த அந்த காதலை என்னால் சம்பாதிக்க முடியுமா?

என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?

எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும் பக்குவத்தை எனக்கு தந்து இப்படியும் கவிதைகள் எழுதலாம் என புதிய அனுபவத்தையும் எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.

என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய் உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் “சாரி” என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்..!!

Forward Msg :)

Permalink Leave a Comment

Next page »

Follow

Get every new post delivered to your Inbox.